Wednesday, December 23, 2020

ஜனவரி 1 முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் புதிய மாற்றம் மக்கள் அதிர்ச்சி

 ஜனவரி 1 முதல் எரிவாயு சிலிண்டர்  விலையில் புதிய மாற்றம் மக்கள் அதிர்ச்சி 






Introduction :




தற்போது  எரிவாயுவின் சிலிண்டரின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின்  மத்தியில்  பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

மேலும் கடந்த 30 நாட்களுக்குள் சிலிண்டரின்   விலையானது இரண்டு முறை அதிகரித்தது பெரும் அதிர்வலையை   ஏற்படுத்திய நிலையில் அடுத்து ஒரு புதிய அறிவிப்பினை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது .

அதாவது வரும் ஜனவரி முதல் எரிவாயு சிலிண்டெரி விலையானது வாரந்தோறும்  மாற்றம்  ஏற்படும் என்று அறிவித்துள்ளது .

இதற்க்கு முன்னர் மாதத்தின்  முதல் வாரத்தில் சமையல் எரிவாயுவின் விலையானது நிர்ணயிக்கப்பட்டும் அந்த விலையானது அந்த மாதம்  முழுவதும் மாறாமல்  இருக்கும் என்று அறிவித்த நிலையில் தற்போது  புதிய அறிவிப்பானது மக்களுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .




வரவிருக்கும் ஜனவரி 1 / 2021 முதல்  சமையல் எரிவாயுவின் விலையானது வாரந்தோறும் மாற்றம் ஏற்படும் அந்த விலையானது அந்த வாரத்தின் இறுதிவரை  இருக்கும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது .

அதற்க்கான பேச்சுவார்தையானது நடைபெற்று வரும் நிலையில் இதுவே நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விளையும் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படும் எனவும்  ஏற்பட்டால் காலை 6  மறுநாள் காலை 6 மணிவரை இந்த விலையானது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது .
 

No comments:

Post a Comment