Saturday, October 31, 2020

How to apply for PF Form 10D monthly pension scheme with full details in tamil

 How to apply for Form 10D in Monthly pension Scheme full procedure  


Introduction :

இந்த பதிவில் Monthly pension பணம் பெறுவதற்கு online ல்  எப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு என்னென்ன தகவல்கள் தேவை எந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம். 



PF Form 10D Monthly pension scheme :

நம்மில் பலருக்கும் online வழியாக மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா? என்கிற சந்தேகம் உள்ளது. மேலும் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளது. 

முதலில் நமது pf pension பணத்தை எப்படியெல்லாம் எடுக்க முடியும் என்று பார்க்கலாம். 

நமது மாதாந்திர pension பணத்தை பெற நீங்கள் online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது pf அலுவலகம் சென்று படிவத்தை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம். 

Online ல் விண்ணப்பிக்க Form 10D  யை தேர்வு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பைக்க வேண்டும். 

நீங்கள் சாதாரணமாக Form 19 அல்லது Form 10c யை எப்படி online வழியாக விண்ணப்பிக்கிறீர்களோ அதே போன்று தான் monthly pension பணத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும். 

Eligible for Monthly pension :

நீங்கள் மாதந்திர பென்ஷன் பணத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் குறைந்தது ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 9.5 ஆண்டுகள் அல்லது அதற்க்கு அதிகமான வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே நீங்கள் மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவீர்கள். 

இந்த 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக நீங்கள் பணிபுரிந்திருந்தால் நீங்கள் மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாவதவராக கருதப்படுவீர்கள். 

9.5 ஆண்டுகளுக்கு குறைவாக பணி புரிந்திருந்தால் நீங்கள் Form 10C யை தேர்வு செய்து உங்களின் pension பணத்தை ஒரே  முறையில் மொத்தமாக withdrawal செய்துகொள்ள வேண்டும். 

உங்களுடைய வயது 58யை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

Required Documents for pension claim form 10D :

Monthly pension பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றால் நீங்கள் உங்களின் UAN ல் ஒரு Nominee யை சேர்க்கவேண்டும் அவ்வாறு சேர்த்தால் மட்டுமே உங்களால் Form 10D யை தேர்வு செய்ய முடியும். 

Nominee என்றால் உங்களின் இறப்புக்கு பின்னர் உங்களின் pension பணத்திற்கு உரிமையுள்ளவர். 

மேலும் உங்களின் வயது 58யை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதற்க்கு குறைவாக இருந்தால் விண்ணப்பிக்க முடியாது. 

Online ல் விண்ணப்பிக்க நீங்கள் உங்களின் UAN ல் இணைத்திருக்கும் வங்கி கணக்கின் காசோலை கட்டாயம் வேண்டும் இவை இருந்தால் போதும் online ல் நீங்களே விண்ணப்பிக்கலாம். 

நீங்கள் விண்ணப்பித்த  அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதாந்திர pension வழங்கப்படும். 

இந்த pension பணமானது உங்களின் UAN உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 

Monthly pension form 10D Apply using Offline method (using PF office) :


நீங்கள் online வழியாக விண்ணப்பிக்க தெரியாதவராக இருந்தால் நீங்கள் உங்களின் pf அலுவலகத்திற்கு நேரடியாக சென்று படிவம் 10D யை பூர்த்தி செய்து அதனுடன் nominee யை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களின் வங்கி பாஸ்புக் அல்லது வங்கியின் காசோலையை மற்றும் ஆதார் அட்டை கையில் எடுத்து செல்வது அவசியம்.

இவ்வாறு விண்ணப்பித்தும் நீங்கள் மாதாந்திர pension பணத்தை பெற முடியும். 

When you submit the Life certificate :

நீங்கள் மாதாந்திர pension பெற விண்ணப்பித்த முதல் ஆண்டு மட்டும் Life Certificate submit செய்ய தேவை இல்லை. 


இதன் பின்னர் அடுத்த வருடத்தில் இருந்து ஒரு ஒரு வருடமும் நீங்கள் Life certificate submit செய்ய வேண்டும் அவ்வாறு submit செய்தவர்களுக்கு monthly pension நிறுத்தப்படும். 


Life certificate யை நீங்கள் உங்களின் வங்கி அல்லது இ  சேவா மையத்தில் சமர்ப்பிக்கலாம். 

அப்படி சமர்ப்பிக்கும்போது உங்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும். 

இது ஒரு ஒரு ஆண்டும் செய்ய வேண்டும் அப்போது தான் உங்களுக்கு pension பணம் வழங்கப்படும். 

நீங்கள் உயிருடன் தான் இருக்கீர்கள் என்பதை உறுதி செய்வதற்க்கே இந்த life certificate யை சமர்ப்பிக்க வலியுறுத்துகிறார்கள். 

Friday, October 30, 2020

சமையல் எரிவாயு முன்பதிவு செய்யும் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சமயல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் தற்போது மாற்றப்பட்டுள்ளது




Introduction :

தற்போது இந்திய முழுவதும் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்ணினை மாற்றம் செய்து இன்டானே LPG நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 

Full Details :

நீங்கள் இன்டானே LPG இணைப்பு வைத்திருப்பவராக இருந்தால் வரும் நவம்பர் ஓன்று முதல் நீங்கள் எரிவாயு நிரப்புவதற்கு புக்கிங் செய்யும் புதிய எண்ணினை பயன்படுத்த வேண்டும் என்று அதற்க்கான புதிய தொலைபேசி எண்ணினை இன்டானே நிறுவனமானது வெளியிட்டுள்ளது. 

இனி நீங்கள் LPG புக்கிங் செய்வதற்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு call செய்து புக்கிங் செய்துகொள்ளலாம். 

            👉👉7718955555


இனி இந்தியா  முழுவதும் இந்த ஒரே எண் மூலமாக காஸ் புக்கிங் செய்துகொள்ள முடியும். 

இதற்க்கு முன்புவரையில் இன்டானே LPG எரிவாயு நிரப்புவதற்கு புக்கிங் செய்வதற்கு 9911554411இந்த எண்ணானது பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர நீங்கள் தொலைபேசி அழைப்பு மூலமாக booking செய்வதை விரும்பவில்லை என்றாலும் அதைவிட எளிதாக whatsapp வழியாகவும் நீங்கள் booking செய்ய முடியும். அதற்க்கு நீங்கள் உங்களின் whatsapp ள் இருந்து 7588888824  எண்ணிற்கு REFILL என Type செய்து உங்களின் LPG இணைப்புடன்  இணைக்கப்பட்ட whatsapp எண்ணில் இருந்து sms அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யும்போது உங்களின் lpg காஸ் booking செய்யப்படும். 


Thursday, October 29, 2020

எடப்பாடி அரசு அதிரடி உத்தரவு மாதம் ரூ. 3000 வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்

 மாதம் ரூ. 3000 வழங்குவதற்கான புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர். 




Introduction :

தற்போது தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் இளைஞர்களுக்கான ஒவ்வொரு மாதமும்  ரூ. 3000 வழங்கும் புதிய திட்டத்தை துவங்கி  வைத்தார். 

Full Details :

தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  சட்ட கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள் பலரும் முழுமையான வழக்கறிஞர்கள் ஆவதற்கு  குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். 

அவர்கள் முழுமையான வழக்கறிஞர்கள் ஆவதற்கு தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அப்போதுதான் அவர்களுக்கு பார் கௌன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழை பெற முடியும். 

 அதன் பின்னர் அவர்கள் யாராவது ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் அவ்வாறு 3ஆண்டுகள் அனுபவம் பெற்ற பின்னரே ஒரு இளநிலை வழக்கறிஞர் ஆக செயல்பட முடியும். 

மொத்தத்தில் முழுமையான இளjநிலை வழக்கறிஞர் ஆவதற்கு  குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். சில நபர்கள் குடும்ப வறுமையிலும் தன்னை ஒரு இளநிலை  வழக்கறிஞர் ஆக மாற்ற முற்படும்போது அவர்களுக்கு போதுமான பண வசதி இருக்காது. அதுபோன்ற வறுமையில் வாடும் இளைஞர்களின் நலனை  கருத்தில் கொண்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் மாதம் மாதம் ரூ. 3000 வழங்க அரசு புதிய திட்டம் ஒன்றை தொங்கியுள்ளது. 

இதன்படி சட்ட கல்லூரியில் பயின்று வெளிவரும் இளைஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 3000 வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கு இளைஞர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உதவி தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . 

Wednesday, October 28, 2020

நவம்பர் 1 முதல் LPG விநியோகத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள்

நவம்பர் 1 முதல் LPG  விநியோகத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் 






Introduction :

நவம்பர் 1 முதல் LPG விநியோகம் மற்றும் அதன் விதி முறைகளில் பல விதமான மாற்றங்கள் வர போகிறது .இந்த பதிவை முழுமையா படித்து தெரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமான  தகவல் .




Full Detail :

தற்போது நமது LPG விநியோகத்தில் பல மாற்றங்கள் கொண்டுவர பட்டுள்ளது .அந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர போவதாகவும் கூறப்படுகிறது .அதில் முதலாவதாக 

1.LPG Cylinder விநியோகத்திற்கு OTP முறை கடைபிடிக்கப்படும் :

வரும் நவம்பர் 1 முதல் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் OTP முறையை கடை பிடிக்க போவதாக அறிவித்துள்ளது .இதன்படி இனிமேல் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணானது கட்டாயம் வேண்டும். OTP இல்லாமல் உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த முறையானது சிலிண்டர் திருட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

2.தொலைபேசி எண் மற்றும் முகவரி மாற்றம் செய்திருந்தால் புதுப்பித்தல் மிகவும் அவசியம்  :

                          LPG வாடிக்கையார்கள் பலர் அவர்களின் தொலைபேசி எண்  மற்றும்  முகவரி மாற்றம் செய்திருந்தால் உடனே உங்களின் விநியோகஸ்தரிடம் தெரிவித்து உங்களின் தொலைபேசி எண்  அல்லது முகவரி மாற்றம் செய்திருந்தால் அதனை புதுப்பித்தல் அவசியம் .அவ்வாறு புதுப்பிக்காத  பற்றத்தில் உங்களுக்கான  சிலிண்டர்  விநியோகம் நிறுத்த படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது .

3.Indane LPG சிலிண்டர் Booking செய்வதற்கான தொலைபேசி எண் மாற்றம் :

தற்போது இன்டானே gas நிறுவனமானது சிலிண்டர் refilling  செய்வதற்கான தொலைபேசி எண்ணினை  நாடு ஒரே தொலைபேசி எண்ணாக மாற்ற திட்டமிட்டு தற்போது Gas Refilling செய்வதற்கான புதிய எண்ணினை  அறிமுகம் செய்துள்ளது .

இதன்படி  இனிவரும்  காலங்களில் Indane gas  வாடிக்கையாளர்கள் 7718955555 இந்த எண்ணினை பயன்படுத்தி உங்களின் சிலிண்டர் Refilling Booking  அறிவிக்கப்பட்டுள்ளது .

4.Cylinder விலை குறித்த அறிவிப்பு :


இனி வரும் காலங்களில் சிலிண்டர் Refilling செய்வதற்கான கட்டணத்தை அந்தந்த மாதத்தின் முதல் தேதியில்  அறிவிக்கப்படும் .அந்த கட்டணமே அந்த மாதத்தின்  இறுதிவரையில் வசூலிக்கப்படும் .

Sunday, October 25, 2020

தமிழகத்தில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு அடித்தது ஜாக்போர்ட்

 தமிழ்நாட்டில் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு  அடித்தது  ஜாக்போர்ட்


Introduction :

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி  வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல விதமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் உள்ள பொறம்போக்கு இடங்களை இரண்டாக பிரித்து அதில் 

1.ஆட்சபனை இல்லாத பொறம்போக்கு இடம் மற்றோன்று 
2.ஆட்சபனை உள்ள பொறம்போக்கு இடம் என  இரண்டாக பிரித்துள்ளார். 

அதில் ஆட்சபனை இல்லாத பொறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு  பட்டா   முடிவெடுத்துள்ளார். 

ஆட்சபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் வசிக்கும் நபர்களுக்கு வேறு மாற்று இடம் வழங்குவதாகவும் அரித்துள்ளார். 

Full Details :


தற்போது தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மக்கள் புறம்போக்கு இடங்களில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அந்த பொறம்போக்கு இடத்திற்கு வீடு u கட்டி நீண்டநாள் வசிக்கும் மக்களுக்கு  உடனடியாக பட்டா வழங்க முடிவெடுத்துள்ளார். 

இந்த பட்டா வழங்கும் விழாவானது வரும் டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் அவர்களால்  தொடங்கி வைக்கப்படும்  எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு சண்முகம் அவர்கள் அந்தந்த மாட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் ஒன்ரை அனுப்பியுள்ளார். 

அதில் பல வருடமாக எந்த ஒரு ஆட்சபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்கள் எத்தனைபேர் என்பதையும் ஆட்சபனைக்கு உட்ப்பட்ட புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்கள் எத்தனைபேர் என்பதையும் கணக்கெடுத்து அவர்களுக்கான பட்டா வளங்களை முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். 

அதில் ஆட்சபனைக்கு உட்ப்பட்ட இடங்களில் வாசிப்பாவர்களுக்கு அந்த இடதிற்கு பதிலாக வேறு மாற்று இடம் வழங்க போவதாக கூற பட்டுள்ளது. 

எந்த ஆட்சபனையும் இல்லாத இடங்களுக்கு உடனடி பட்டா கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 


Saturday, October 24, 2020

இந்த மாதத்திற்குள் Life Certificate Submit செய்யாதவர்களுக்கு pension நிறுத்தப்படும் அரசு எச்சரியகை

 Pension பணம் பெரும் சந்தாதாரர்கள் அவர்களின் life Certificate யை சமர்பிக்கவில்லையென்றால் உங்களின் pension நிறுத்தப்படும் .



Introduction :

தற்போது pension வாங்கும் சந்தா தாரர்கள் நவம்பர் மாதத்திற்குள் அவர்களின் Life Certificate  யை சமர்பிக்கவில்லையென்றால் pension நிறுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது .

இந்த certificate  ஆனது அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு ஆவணம் ஆகும் .அதனை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு pension வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தற்போது  ஏற்பட்டுள்ளது கொரானா  நோய் தொற்று காரணமாக  Life Certificate யை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு  நீட்டித்துள்ளது. இதன் படி life Certificate யை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை  நீட்டித்துள்ளது .

இந்த கால இடைவெளிக்குள் நீங்கள் உங்களின் Life Certificate சமர்ப்பிக்க வேண்டும் .அப்படி சமர்பிக்கவில்லையென்றால் உங்களின் pension நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது .

How to update Life Certificate for Pension Account:

உங்களுக்கான Life Certificate யை நீங்கள் உங்களின் வங்கியின்  எந்த ஒரு கிளை வங்கியிலும் நீங்கள் நேரடியாக கொண்டு சமர்ப்பிக்கலாம் .அல்லது online வழியாகவும் சமர்ப்பிக்க முடியும் .

நீங்கள் online வழியாக உங்களுடைய Life Certificate யை  சமர்ப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்து  நீங்களே mobile ,laptop ,pc இவற்றில் ஏதாவது  ஒன்றை பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய முடியும் .

                                     www.jeevanpramaan.gov.in

இது தவிர உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவா மையம் அல்லது CSC Center இவைகளிலும் சமர்ப்பிக்க முடியும் .

இதனை சமர்பிப்பதற்கு நீங்கள் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் ,ஆதார் அட்டை ,பென்ஷன் பணம் வாங்கும் ஆர்டர் எண் (pension payment Order)


Generate Life Certificate Available on Mobile App :

தற்போது Life Certificate யை நாம்  நமது வீட்டில் இருந்துகொண்டே நமது தொலைபேசியில்   பதிவிறக்கம் செய்ய முடியும் .அதற்க்கு  நீங்கள் உங்களின் தொலைபேசியில் UMANG  என்கிற Mobile Application யை பதிவிறக்கம் செய்து அதில்  Life Certificate  என்று type செய்து தேடினால் உங்களுக்கு அதற்க்கான தகவல்கள் காண்பிக்கப்படும் .அதன் பின்னர் உங்களுக்கான தேர்வினை தேர்வு செய்து அதில் உங்களின் தகவலை பதிவு செய்து life Certificate பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .

Umang App Download Link :




UMANG App ல் உங்களின் Life Certificate பதிவிறக்கம் செய்வதற்கான பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும் .

Part 1 :

Part 2:








Thursday, October 22, 2020

ATM Money withdrawal new rule RS. 24 charged on more then 5000 ATM withdrawal

 ATM Money withdrawal new rule RS. 24 charged on more then 5000 ATM withdrawal




Introduction :

தற்போது ரிசர்வ்  வங்கியானது ஒரு புதுவிதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்றால்  ATM இயந்திரத்தின் வழியாக 5000ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 24 ரூபாய் வரையில் கட்டணம் விதிக்க போவதாக முடிவு செய்துள்ளது. 

Full Details :


ரிசர்வ் வங்கியானது ATM இயந்திரத்தின் வழியாக அதிகமாக பணம் எடுப்பதை தவிர்ப்பதற்காக ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு 5முறைக்கு மேல் நீங்கள் ATM இயந்திரத்தின் மூலமாக 5000ரூபாய்க்கு மேல் பணம்  எடுத்தால் உங்களுக்கு 24 ரூபாய் சேர்த்து கட்டணம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்த பின்னர் நீங்கள் ஆறாவது முறை ATM ல் பணம் 5000ரூபாய்க்கு மேல் எடுத்தால் 24ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

இதற்கு முன்புவரையில் 5 முறைக்கு மேல் 6வது முறை  ATM இயந்திரத்தில் இருந்து  பணம் எடுத்தால்  உங்களுக்கு 20 ரூபாய் மட்டுமே கட்டண பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது இந்த முறையினை மாற்றி 24 ரூபாய் கட்டண பிடித்தம் செய்ய போவதாக RBI அறிவித்துள்ளது. 



இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடப்பட வில்லை . 

கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான்  இந்த ATM Withdrawal கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது. 

மேலும் நீங்கள்  5முறைக்கு பின்னர் ATM யை பயன்படுத்தி பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 24 ரூபாய் கட்டண பிடித்தம் இருக்கும். 


Wednesday, October 21, 2020

Hero splendor + Black Accent with new customize Option

 Hero splendor + Black Accent with new customize Option 









Introduction :

தற்போது Hero நிறுவனமானது Hero Splendor + Accent என்கிற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது இந்த மோட்டார் சைக்கிளில் உங்களின் சொந்த விருப்பப்படி bike ஸ்டிக்கரிங்ல்  மாற்றங்களை செய்யும் வகையில் கொண்டுவந்துள்ளது .

Full Details :

நாம் அனைவரும் நமது மோட்டார் சைக்கிளை நமது சொந்த விருப்பப்படி Logo மற்றும் நிறத்தை மாற்றம் செய்வோம். அந்த தேர்வினை தற்போது hero நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது .

இதுவரையில் எந்த நிறுவனமும் செய்யாத ஒரு புது விதமான தேர்வினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வாடிக்கையாளர்களை தன்  வாச படுத்த முயற்சிக்கிறது Hero நிறுவனம் .

Bike Customize  :

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள hero Splendor + ஆனது முற்றிலுமாக கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
 
மேலும் கருப்பு நிறத்தில் செயின் கவர் ,அலாய் வீல் ஆகியவை முற்றிலும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .





பேட்ரோல் டாங்கீல்  நீங்கள் Graphics design தேவைப்பட்டால் 3 விதமான  color Graphics தேர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும் அதில் உங்களுக்கு பிடித்த நிறத்தினை தேர்வு செய்து கொள்ள முடியும் .

இந்த color Graphics தேர்வுக்கான கட்டணம் ரூபாய் 899 கூடுதலாக செலுத்த வேண்டும் .

உங்களுக்கு பெட்ரோல் டேக்கில் எந்த ஒரு Graphics color தேவை இல்லை என்றால் நீங்கள் கூடுதல் கட்டணம் ரூபாய் 899 செலுத்த தேவை இல்லை .

மேலும் 3D Hero Logo  + Rim tab + Graphics color  இவை மூன்றும் உங்களுக்கு தேவை பட்டாள் உங்களின் மோட்டார் சைக்கிளில் செய்ய விரும்பினால் அதற்க்கான கட்டணம் ரூபாய் 1,399செலுத்த வேண்டும் .

இந்த Modification எதுவும் தேவை இல்லை என்றால் நீங்கள் 1,399 ரூபாய் செலுத்த தேவை இல்லை .

Price Of Motor cycle :

இந்த மோட்டார் சைக்கிளின் தற்போதைய  ஷோரூம் விலை  ரூபாய் 64,470 ஆகும் .

நீங்கள் உங்களின் மோட்டார் சைக்கிளில் மேலே குறிப்பிட்டுள்ள modification செய்தால் 64,470 + 1,399 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும் .

Different Type  variants :




1.Kick with Alloy wheel BS6,          -   Rs.64,460
2.Self with Alloy wheel BS6,           -   Rs.62,800
3.Splendor Plus Self with Alloy wheel and i3S BS6, - Rs.63,960


SBI Bank New update details Happy on SBI Customers

 நீங்கள் SBI  Bank வாடிக்கையாளர்களாக இருந்தால் இது உங்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி தான் 











Introduction :


SBI வங்கியானது தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் minimum Balance வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை .

மேலும் minimum Balance வைக்காமல் இருந்ததற்காக உங்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசுழிக்கப்படுவது இல்லை எனவும் அறிவித்துள்ளது .


Full Details :


SBI  வங்கியானது தனது வாடிக்கையாளர்கள் குறைந்த பற்ற இருப்பு தொகையை அவர்களின் வங்கி கணக்கில்  வைக்க தவறியவர்களிடம் இருந்து  எந்த ஒரு கட்டணமும்  வசூலிக்க படாது என்று அதிகார பூர்மவமாக அறிவித்துள்ளது .

அது மட்டுமில்லாமல் SBI வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் (SMS )குறுஞ்செய்திக்கு எந்த ஒரு ஆண்டு  கட்டணமும் இனிமேல் இருக்காது முற்றிலும் இலவசம் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் நகர்ப்புறங்களில் உள்ள  SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தது 3000 ரூபாய் இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்று  இதற்க்கு முன்னர் கூறப்பட்டிருந்தது .

அதற்க்கு குறைவான பணத்தை கணக்கில் வைத்திருந்தாள்  அவர்களுக்கு எப்படி கட்டணம் வசூலிக்க படும் என்பதை கீழே காணலாம்  .

3000 ரூபாய் Minimum Balance வைத்திருக்க வேண்டம் என்று வலியுறுத்தப்பட்ட வங்கி கணக்கில்   1500 ரூபாய் மட்டும் வைத்திருந்தாள் உங்களுக்கு 10 ரூபாய் கட்டணம் + GST சேர்த்து செலுத்த வேண்டும் .

உங்களின் வங்கி இருப்பு தொகை 75% க்கும் குறைவாக வைத்திருந்தாள் உங்களுக்கு 15 ரூபாய் + GST  செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது .

Sunday, October 18, 2020

Paytm new update Money transfer from credit card to paytm wallet new charges

 Paytm New update Amount added from credi card to paytm wallet new charges 


Introduction :

தற்போது paytm ஆனது paytm wallet ல் பணத்தை சேர்ப்பதற்கான புதிய கட்டணத்தை வெளியிட்டுள்ளது. அந்த புதிய கட்டண அறிவிப்பை இப்போது பார்க்கலாம். 



Different type Money Added to paytm wallet :


1.Bank to paytm wallet 
2.credit card to paytm wallet
3.other wallet to paytm wallet

1.Bank Account to paytm wallet :

நீங்கள் எந்த ஒரு வங்கியில் இருந்து வேண்டும் என்றாலும் உங்களின் paytm wallet ற்கு பணத்தை அனுப்பலாம் முற்றிலும் இலவசம்  எந்த ஒரு கட்டணமும் கிடையாது.. 

2.Credit card to Bank transfer :

நீங்கள் credit card ல் இருந்து உங்களின் paytm wallet ற்கு பணம் அனுப்பினால் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.  அதற்க்கு 2%வரையில் சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என paytm அறிவித்துள்ளது. 

நீங்கள் எவ்வளவு பணம் credit card ல் இருந்து paytm wallet ற்கு  transfer செய்கிறீர்களோ அந்த பணத்தில் 2% தொகையை கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். 

மேலும் paytm wallet ல் இருந்து பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பவேண்டும் என்றால் அதற்க்கு 1%வரையில் சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. 



Saturday, October 17, 2020

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் புதிய வழிமுறைக்கு தளர்வு

 ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் கைரேகை முறைக்கு  தளர்வு தமிழக அரசு பூர்த்தியை அறிவிப்பு


Introduction :

தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்கிற விதிமுறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரேஷன் பொருட்களை வாங்குவதில் அரசு ஒரு புதிய முறையை அறிவித்திருந்தது. 

என்னவென்றால் ரேஷன் பொருட்களை வாங்க அந்த ரேஷன் அட்டையில் உள்ள நபர் ஒருவர் கைரேகை வைக்க வேண்டும் அது verify ஆனால் மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று . 



தற்போது பயன்பாட்டில் உள்ள  இந்த முறையால் மக்கள் உணவு பொருட்களின் வாங்குவதில் பேரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் பலருக்கும் கைரேகை முறையானது பயனளிக்காமல் போகும் நிலையும் உள்ளது என்பதால் இந்த முறையில் தற்போது தமிழக அரசு புதிய தளர்வினை அறிவித்துள்ளது. 

Full Details :


தற்போது இந்தியா  முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை முறையானது கடைபிடிக்க பட்டு வருகிறது. 

இந்த முறையில்  மக்கள் பலரும் பொருட்களை வாங்க அதிகமான கால தாமதம் ஏற்படுவதாகவும் பலருக்கு அவர்களின் கை ரேகையானது ஒத்துப்போகவிலை என்பதாலும் அவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களின் வழங்க படாமல்  திரும்பி அனுப்பப்படுவதாகவும்  அதிகமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது . 

மேலும் இந்த முறையினால்  ஒரு நாளைக்கு 20 நபர்களுக்கு மட்டும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது நடை முறையில் இருக்கும் இந்த கைரேகை முறையானது மக்கள் பலருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுப்பதாக கருதுகிறார்கள். 

இத்தனை கருத்தில் கொண்டு தற்போது ரேஷன் கடைகளில் பின்பற்றப்படும் கைரேகை முறையில் தளர்வினை அறிவித்துள்ளது. 



இதன் படி கைரேகை  முறையானது பயனளிக்கவில்லை என்பதற்காக மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் தலைவர் திரு. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும் கைரேகை முறை பயனளிக்காத  நிலையில் பழைய நடைமுறையில் இருந்த முறையினை பின்பற்றி உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. 

மேலும் இந்த கைரேகை முறையில் உள்ள தொழில் நுட்பங்களை மேம்படுத்துவரையில் பழைய முறையில் உணவு பொருட்களை வழங்கவும் உத்தரவிட பட்டுள்ளது. 

இதனால் தற்காலிகமாக இந்த biometric கைரேகை முறையானது நிறுத்த படுவதாகவும் தமிழக அரசு அரிவித்துள்ளது. 

தற்போது  அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்கனவே உள்ள  ரேஷன் அட்டையை scan செய்யும் முறை அல்லது ஆதார் அட்டையை scan செய்யும் முறை அல்லது Mobile OTP முறை இதில் ஏதாவது ஒரு முறையினை பின்பற்றி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. 

Gas Cylinder delivery new rule Update

நவம்பர் 1 முதல் Gas Cylinder வாங்கவேண்டும் என்றால் இந்த விதி முறைகளை தான் கடைபிடிக்க வேண்டும். 

Introduction :

தற்போது எண்ணெய் நிறுவணங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 1 முதல் ஒரு புதிய விதிமுறைகளை பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது. 



என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் gas cylinder வாங்க வேண்டும் என்றால் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை cylinder delivery செய்பவரிடம் கூறினால் மட்டுமே உங்களுக்கு cylinder வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

Full Details with Benifits :

இந்த OTP  முறையை பின்பற்றுவதால் cylinder திருட்டை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது நடக்கும் cylinder திருட்டை தடுக்கவே  இந்த முறையினை கடைபிடிக்க போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது . 

 மேலும் ஒருசில வாடிக்கையாளர்கள் அவர்களின் cylinder இணைப்பில் அவருடைய தொலைபேசி எண்ணானது இணைக்கப்படாமல் இருக்கும் பற்றத்தில் cylinder delivery செய்ய வருபவர் அவருடைய புதிய எண்ணினை application வாயிலாக இணைத்து OTP யை generate செய்து அந்த OTP Verify செய்த பின்னர் அவர்களுக்கு cylinder வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

இதனால் தொலைபேசி எண்ணினை அவர்களின் gas இணைப்புடன் இணைக்காதவர்கள் அவர்களின் தொலைபேசி எண்ணினை எளிதில் இணைத்துக்கொள்ள முடியும். 

ஏற்கனவே OTP அனைத்து cylinder delivery முறைகளிலும் கடைபிடிக்க படுகிறது ஆனால் கட்டாயம் OTP இருந்தால் தான் cylinder delivery செய்யப்படும் என வலியுத்தமல் அனைவருக்கும் cylinder வழங்கபடுகிறது. 

இனி வரவிருக்கும் நவம்பர் 1 முதல் கட்டாயம் cylinder OTP முறை கடை பிடிக்க போவதாக அறிவிக்க பட்டுள்ளது. 

இந்த முறையானது வீடுகளுக்கு delivery செய்யப்படும் cylinder களுக்கு  மட்டுமே கடைபிடிக்க படுமே தவிர நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்க பட்டுள்ளது. 

Thursday, October 15, 2020

PF Account new update Pf bulk transfer Exempted to un-exempted

 PF Account new update  Pf bulk transfer Exempted  to un-exempted


Introduction :


தற்போது நமது pf கணக்கில் புதிய ஒரு மாற்றம் (update ) கொண்டுவரப்பட்டுள்ளது, அதை   பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 

New update :


Exempted PF Amount Transfer to Un-exempted PF 

அதாவது தற்போது கொண்டுவரப்பட்ட update படி இனிமேல்  trust PF கணக்கில் உள்ள PF பணத்தை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும்  EPFO கணக்கிற்கு நம்மால் Transfer செய்ய முடியும். 

இதற்க்கு முன்பு வரையில் நம்மால் trust PF கணக்கில் உள்ள pf பணத்தை அந்த நிறுவனத்தில் பணியில் இருந்து விலகியதும் எடுக்க மட்டுமே முடியுமே தவிர EPFO கணக்கிற்கு transfer செய்ய முடியாது. மற்ற trust கணக்கிற்கு மட்டும் transfer செய்ய முடியும். 

நீங்கள் பணிபுரியும் நிறுவனமானது ஒரு trust pf நிறுவனமாக இருந்தால் இதற்க்கு முன்பு வரையில் pf பணத்தை எடுக்க மட்டுமே செய்திருப்பீர்கள் இனிமேல் எடுக்க தேவை இல்லை. 

அதற்க்கு பதிலாக நீங்கள் வேறு நிறுவனத்தில் பணியில் சேரும்போது அந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்படும் epfo pf செலுத்தும் நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு உங்களின் பழைய trust pf பணத்தை transfer செய்துகொள்ள முடியும். இவ்வாறு transfer செய்வதால் உங்களின் பணம் சேமிக்கப்படுகிறது. 

இப்படி Transfer செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

1.மத்திய அரசின் கீழ் இயங்கும் EPFO ல் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது, 

2.உங்களின் மொத்த PF பணத்தையும் நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் ஆன்லைன் வழியாக உங்களால் Claim செய்துகொள்ள முடியும், 

3.உங்களின் இருப்பு தொகை எவ்வளவு  என்பதை எப்போது வேண்டுமானாலும் நீங்களே ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியும். 

4.உங்களுக்கு வட்டி எவ்வளவு வழங்கப்பட்டது  என்பதையும் வட்டி செலுத்த பட்டதா?  இல்லையா? என்பதையும் நீங்களே தெரிந்துகொள்ள முடியும். 

Wednesday, October 14, 2020

Instant Personal Loan up to 20,000 using Cash on Mobile Application with Download Link

 Instant personal Loan up to 20,000 using Cash on Mobile App





Introduction :


➤  இந்த application பெயர்   cash on   Application  .இந்த application ஆனது ஒரு short term மற்றும் Loan term  loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை  போதும்  . 


➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று அதிகம்  வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 20%முதல் அதிகப்பற்றமாக 36%வரையில் வழங்கப்படுகிறது .




➤ இந்த application யை பயன்படுத்தி ஒரு அவசர தேவைக்கு உங்களால் கடன் பெற முடியும் உடனடியாக Loan Approved செய்யப்படுகிறது ,


➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

தேவைப்படும் ஆவணங்கள்:


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,

Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை & ஆதார் அட்டை ,
3.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

Application Download link:




பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.தங்களின் புகைப்படம்,

வழங்க படும் கடன்கள்(Loan)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல் அதிகப்பற்றமாக   36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 07 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 120 நாட்கள்  வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


Application Download link:



விண்ணப்பிக்கும் முறை :


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்துகொள்ளவும் .




➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவேண்டும் ,இதனை தொடர்ந்து என்ன காரணத்திற்கு இந்த  கடனை வாங்க இருக்கீர்கள் என்பதன் ஓஆரணத்தை தேர்வு செய்யவும் ,
இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதில் முதலில் உங்களின் KYC Documents  யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில்  முதலில் உங்களின் பான் அட்டையின் முன் பக்கம் மற்றும் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை  புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வேண்டும்.

➤  அடுத்ததாக இதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற  தேர்வு செய்யவும் 



அடுத்ததாக personal information  என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில்  உங்களின் பெயர்  பிறந்த தேதி  நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?உங்களின் கல்வி தகுதி ,உங்களின் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு ,உங்களின் தற்போதைய முகவரி ,உங்களின் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட ,உங்களின் நிறுவனத்தின் முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவும் .

அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய  தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இப்போது உங்களின் வங்கி கணக்கு  பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கி IFSC  எண்  மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை தேர்வு செய்யவும் இதன் பின்னர் submit என்கிட்ட தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களுக்கு எவ்வளவு கடன் வாங்க தகுதியுள்ளது என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் அதில் காண்பிக்கப்படும் கடன் தொகை உங்களுக்கு போதுமானதாக இருந்தால் எடுக்க விரும்பினால்  கீழே உள்ள Apply  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் 

➤  இப்போது   உங்களுக்கு காண்பிக்கப்பட்ட கடன் தொகையை எடுத்தால் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்  என்பது  பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்க படும் அவை அனைத்த்தும் உங்களுக்கு சம்மதம் என்றால்  மறுபடியும் கீழே தோன்றும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  மேலும் இந்த  application வாங்கும் கடனுக்கு  வட்டி விகிதம் மிகவும் அதிகம் ஆனால் உங்களின் அவசர தேவைக்கு இந்த application மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிபிடத்தக்கது .

My claim has been rejected and no reason has been provided by EPFO What does it mean

Introduction :


நாம் PF பணத்தை Claim செய்யும்போது பல்வேறு பட்ட காரணத்திற்க்காக நமது PF Claim ஆனது நிராகரிக்கப்படுகிறது .இதில் ஒருசிலருக்கு என்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடாமல் இருக்கும் ,பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு  அவர்களின் PF Claim நிராகரிப்புக்கான காரணம் குறிப்பிட பட்டிருக்கும் .



இப்போது என்னென்ன காரணகளுக்கு உங்களின் claim நிராகரிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

1.pf claim rejected member name not printed on cheque:

பெரும்பாலான PF Claim நிராகரிப்புக்கு காரணம் அவர்கள் PF பணத்தை Claim செய்யும்போது அவர்கள் பதிவேற்றும் ஆவணம் (Documents)தான் .

  • நீங்கள் வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்திருந்தால் பெரும்பாலும் நிராகரிக்க படும் .
  • நீங்கள் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்தும் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் பதிவேற்றம் செய்த வங்கியின் காசோலையில் உங்களின் பெயர் ஆனது print செய்யப்படாமல் இருக்கும் .
அல்லது
  •  உங்களின் வங்கி காசோலையில்  உங்களின் பெயர் தவறாக print செய்யப்பட்டிருக்கலாம் ,
உதாரணமாக உங்களின் UAN kyc ல் உங்களின் பெயர்  இருப்பதுபோன்று உங்களின் வங்கி காசோலையில் print செய்யப்படாமல் இருக்கலாம் .இப்படி இருந்தாலும் உங்களின் Claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .


2.PF claim rejected due to father name mismatch

  • அடுத்தபடியாக உங்களின் PF Claim  நிராகரிப்புக்கு முக்கிய காரணம் உங்களின் PF கணக்கில் உங்களின் தந்தை அல்லது கணவரின்  பெயர் தவறாக குறிப்பிட பட்டிருந்தால் கட்டாயம் உங்களின் PF Claim  நிராகரிக்கப்படும் .

இதனை உங்களின் UAN  Login செய்து அதில் உங்களின் Profile பக்கத்தை திறந்தாள் உங்களின் தந்தை அல்லது கணவர் பெயர் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும் .


3.PF Claim Rejected Due to Date of Joining /Leaving Dose not match with Company record :

  • உங்களின் நிறுவனத்தில் உங்களின் DOJ அல்லது DOE தேதி இதில் ஏதாவது ஓன்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களின் Claim  நிராகரிக்கப்படும் .
இதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால் உங்களின் PF Passbook யை திறந்து அதில் உங்களுக்கு இறுதியாக எப்போது contribution Credit செய்யப்பட்டதோ அதே மாதம் உங்களின் DOE பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் சரி என்று அர்த்தம் ,

மாறாக வேற ஒரு மாதம் குறிப்பிட பட்டிருந்தால் உங்களின் DOE தேதி தவறு என்று அர்த்தம் .


அதேபோன்று உங்களின் DOJ தேதி தவறா அல்லது சரியா என்பதை தெரிந்துகொள்ள உங்களின் DOJ தேதிக்கு முன்னர் உங்களின் PF Passbook ல் Contribution  credit  செய்யப்பட்டிருந்தால் உங்களின் DOJ தேதி தவறு என்று அர்த்தம் .


4.PF  claim rejected due to incomplete Bank details :

  • உங்களின் PF கணக்கின் KYC ல் நீங்கள் இணைத்திருக்கும் வங்கி கணக்கு எண் அல்லது IFSC Code இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறாக KYC ல் Save செய்திருந்தால் உங்களின் PF Claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .
இதற்க்கு நீங்கள் மறுபடியும் உங்களின் வங்கி கணக்கை உங்களின் UAN KYC ல் இணைக்க வேண்டும் .அப்படி இணைத்து Fully Digitally Approved ஆக வேண்டும் Approved ஆனா பின்னர் Claim செய்தால்  ஏற்றுக்கொள்ள படும் .


5.PF Claim rejected due to technical problem :

தற்போது நமது PF இணையதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைவதால் அடிக்கடி நமது PF இணையதளத்தில் Error ஏற்படுகிறது .அதுமட்டுமில்லாமல் Technical Problem தற்போது அதிகமாக ஏற்படுகிறது .

அதுபோன்று Technical  Error வரும் சமயங்களிலும்  நீங்கள் PF Claim-ற்க்கு  விண்ணப்பித்திருந்தால்  உங்களின் Claim நிராகரிக்கப்படும் ,

இதுபோன்று நிராகரிக்கப்பட்டால் நீங்கள் மறுபடியும் விண்ணப்பித்தால் உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ள படும் .