Sunday, October 11, 2020

அறிமுகமாகிறது புதிய திட்டம் சொத்துவிபர அட்டை (Svamitva scheme property card)

 அறிமுகமாகிறது மோடியின் புதிய திட்டம் சொத்துவிபர அட்டை (Svamitva scheme property card)


Introduction :


தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கிராமபுற மக்களின் நலனுக்காக புதியதாக  ஒரு திட்டத்தை இன்று அறிமுகப்படியுள்ளார். 



அந்த திட்டத்தின் பெயர் சொத்து விபர  அட்டை திட்டம் (svamitva scheme property card)

Svamitva scheme property card full details:

Svamitva scheme property card என்றால் என்னவென்றால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அவை அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு சொத்து விபரம் அட்டை வழங்கப்படும். 

இந்த அட்டையானது அந்தந்த மாநில அரசால் அவர்களுக்கு வழங்கப்படும். 

மேலும் உங்களின் சொத்து விபரங்கள் அனைத்தும் உங்களின்  சொத்துக்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுச்செய்தியாக அனுப்பப்படும். 

அந்த குறுஞ்செய்திகளில் ஒரு இணையதள link கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து உங்களின் சொத்து விபர அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும், 

தற்போது ஒரு இலட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த அட்டையானது வழங்கப்பட உள்ளது, 

மேலும் நாடு முழுவதுமுள்ள 6, 62, 000கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் சொத்து விபரம் அட்டை அடுத்து வரும் 4 ஆண்டுக்குள் வழங்க  பட உள்ளது, 

Benefits of scheme :

1.இந்த சொத்து விபரம் அட்டையின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் அவர்களின் சொத்து உரிமை அட்டையை காண்பித்து வங்கிகளில் கடன் பெறவும் வரி சலுகை பெறவும் இந்த கடன் அட்டை உதவிகரமாக இருக்கும். 

2.இந்த சொத்து அட்டையை வைத்து எந்த ஒரு நிதி நிறுவனத்திலும் எளிதில் கடன் பெற முடியும், கடன் பெறுவதற்கு இது ஒரு முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படும் இதனால் கிராம மக்கள் அனைவருக்கும் எளிதில் கடன் பேரும் வசதி ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment